உச்சி ஆதவனின் உஷ்ணத்தில்
காலை சுக வெயில்
நினைவுக்கு வருவதில்லை.
ஆரோக்கிய விவாதம்,
ஆதங்கங்களின் வரிசையாக,
அடுத்தவர் மீது சாட்டும் பொழுது
ஆகப்பெரும் மன விரிசலுக்கான
விதை விதைக்கபடுகிறது.
விவாத விதை
விரிசலின் ஊடே
வழக்காக மாறும் போது
வெற்றி தோல்வி காதலை விலை பேசி விடுகிறது.
அங்கே அமைதியுடன் தோல்வியை தழுவுபவர்,
அடுத்து வரவிருக்கும் ஆக பெரும் சண்டையை
தவிர்த்ததில் வெற்றி பெற்று விடுகிறார்.
களத்தில் காயங்கள் - பலமாயினும்....
கடுகளவு காதல் - மீதமிருப்பின்...
கடைசி திருக்குறள்
மீண்டும் ஒருமுறை சரிப்பார்க்கப்படும்.
அருமை
ReplyDelete