Thursday, December 19, 2013

மரணம் பேசியது

மூலக்கதை :  Death Speaks    
Author   : Jeffrey Archer 

தமிழில் :  அடியேன் ( என் முதல் முயற்சி )

பாக்தாத் நகரத்து வியாபாரியிடம், காலையில் மார்க்கெட் சென்ற வேலைக்காரன் பதட்டத்துடனும் பயந்த முகத்துடனும் ஓடி வந்து, "எஜமானரே  காலை மார்க்கெட் சென்றிருந்த பொழுது, ஒரு பெண்மணியின் மீது தவறி விழுந்தேன். திரும்பி பார்த்தால் அவள் மரண தேவதை. பயமுறுத்தும் பார்வையுடன்  மரணம் செய்விக்கும் நோக்குடன் நோக்கினாள். எனக்கு மிகவும் பயமாக உள்ளது. தயவு கூர்ந்து தங்களுடைய குதிரையை இரவல் கொடுத்தால், நான் இங்கிரிருந்து தப்பி சமரா நகரத்திற்கு சென்று விடுவேன். அங்கு மரணம் என்னை கண்டு பிடிக்க முடியாது" என்றான். எஜமானரும் ஒத்துக்கொள்ள, அவரின் குதிரையின் மீதேறி பிரம்பால் அதன் விலாவில் அடிக்க,  மிக வேகமாக அங்கிருந்து அகன்றான்.

பிறகு எஜமானன் மார்க்கெட் வந்து கூட்டத்தில் இருந்த என்னை அடையாளம் கண்டு கொண்டு என்னை நோக்கி, "ஏன் என் வேலைக்காரனை காலையில் பயமுறுத்தும் பார்வையில் பதட்டமிட வைத்தாய்?" என்று கேட்க நான் சொன்னேன் " அது பயமுறுத்தும் பார்வையில்லை. உண்மையில் அவனை பக்தாத்தில் பார்த்ததற்காக ஆச்சர்யபட்டுதான் நோக்கினேன். ஏனென்றால் அவனுடன் இன்று இரவு சமரா வில் சந்திப்பதாகத்தான் ஒப்பந்தம்."



Note:
இது என் முதல் முயற்சி பற்றி உங்கள் கருத்துகளை comment செய்யவும்.

இதன் ஆங்கில மூலத்தை படிக்க click செய்யவும்.

OR copy & paste this link into your browser
http://www.babumadav.blogspot.in/2013/12/death-speaks-short-story-by-jeffrey.html

Wednesday, December 18, 2013

Death Speaks - short story by Jeffrey Archer

 
There was a merchant in Bagdad who sent his servant to market to buy provisions and in a little while the servant came back, white and trembling, and said, Master, just now when I was in the market-place I was jostled by a woman in the crowd and when I turned I saw it was death that jostled me. She looked at me and made a threatening gesture; now, lend me your horse, and I will ride away from this city and avoid my fate. I will go to Samarra and there death will not find me.

The merchant lent him his horse, and the servant mounted it, and he dug his spurs in its flanks and as fast as the horse could gallop he went. Then the merchant went down to the market-place and he saw me standing in the crowd and he came to me and said, Why did you make a threatening gesture to my servant when you saw him this morning? That was not a threatening gesture, I said, it was only a start of surprise. I was astonished to see him in Bagdad for I had an appointment with him tonight in Samarra.

Tuesday, December 17, 2013

R P ராஜநாயஹம் - தகவல் களஞ்சியம்

என்ன தான் ஆங்கிலத்தில் படித்தாலும் தாய் மொழியில் அதுவும் தமிழ் மொழியில் படிப்பதில் வரும் களிப்பே அலாதி தான். ஆங்கிலத்தில் படிக்கும் பொது அர்த்தம் அறிவுக்கு தட்டுபட்டாலும், தமிழில் படிக்கும்போதுதான் மனம் அமைதியுடன் அந்த வாசிப்பு அனுபவத்தை கொண்டாடுகிறது. தமிழை படிக்கத் தேவையில்லை, கண்கள் அதை கடந்து சென்றாலே மூளை அதன் அர்த்தத்தை புரிந்து கொள்கிறது. ஆனால் அங்கிலம் என்றாலோ, முதலில் படித்து (பல நேரங்களில் spelling  கூட்டி), பின்பு இதனை வருடங்களாக நமக்கு கற்பிக்க பட்டு நம் அறிவில் பதிந்து வைத்திருக்கும் dictionary -இல் தேடி( அநேகமாக அதில் இருக்காது), பல நேரங்களில் google or lifco வை நாடி அர்த்தம் புரிந்து கொள்ளுதலில் ஒரு ஆயாசமே இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் எழுத்துக்கள் பரவலாக பயன்பாட்டில் இல்லாத பொழுது சில இணைய எழுத்தாளர்கள் மட்டும் மிக பிடிவாதமாக தமிழ் அவர்களின் சிந்தனையை எழுதி வந்தார்கள். அதில் என்னை ஈர்த்தது சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள். மிக அருமையான நடையில் இயல்பான நையாண்டியில் அந்தரங்க அவதானிபுகளுடன் அவர் எழுதியது மிகவும் கவர்ந்தது. ( புத்தகம் வாங்க வேண்டிய செலவு கூட இல்லை என்பது மற்றுமொரு முக்கிய காரணம்.)  அப்படி எழுதி செல்லும்போது அவரை போன்றே இணையத்தில் சிறப்பாக எழுதி வரும் சில லிங்குகளை கொடுப்பது வழக்கம். அதில் எனக்கு அறிமுகமானது தான் R P ராஜநாயஹம் அவர்களின் blog .

R P ராஜநாயஹம் - ஒரு தகவல் களஞ்சியம். அவருடைய எழுத்துகள் அனைத்தும் தகவல்களால் நிரம்பியவை. இரு தலைமுறை சினிமாவின் தகவல் பொக்கிஷம் அது. வெறும் தகவல் மட்டும் என்றால் எப்படி சுவாரசியமாக இருக்கும்? அத்தகவல்களை மிக சரியாக தன் கட்டுரையில் இடம் பெற செய்து நையாண்டி மற்றும் நகைச்சுவையுடன் கூடிய சரளமான நடையில் அவர் எழுதும் கட்டுரைகள் ஒரு பொக்கிஷமே.

கீழே உள்ளது,  அவரின் blog இல் படித்த கவிஞர் தென்பண்டியனின் கவிதை. மிகவும் எளிய வார்த்தைகளால் எழுதப்பட்ட கவிதை என் நினைவுகளில் தனி இடத்தை பிடித்து கொண்டது.

பறவை ஒன்றை வரையத் துவங்கினேன்
வரைந்து முடிந்ததும் - - -  அது பறந்து விட்டது

மீண்டும் ஒரு பறவையை
வரைந்தேன் - - - அதுவும் பறந்து விட்டது

நான் வரைந்துகொண்டே இருந்தேன்
அவைகள்  - - - பறந்து கொண்டே இருந்தன

இறுதியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை
பறவைகளும் வந்து
அமர்ந்து கொண்டன.

-- தென் பாண்டியன்

மிக முக்கிய குறிப்பு: உத்தமர்கள் இதோடு நிறுத்திவிட்டு தன் comment யை பதிவு செய்து போகவும். ( அப்படி செய்யாமல் மேற்கொண்டு படித்து விட்டு சீ.... சீ  என்று திட்ட கூடாது. )

அவருடைய கட்டுரையில் அவரால் ரசிக்கப்பட்ட சிலரின் படைப்புகளை தனக்கே உரித்தான பாணியில் சொல்லி இருபது ரசிக்கும் படி இருக்கும். அப்படி கவிஞர் தமிழ்நாடன் பற்றிய பதிவில் அவர் குறிபிட்ட இந்த கீழ்க்கண்ட கவிதை தமிழின் பால் எனக்கு இருந்த காதலை  இன்னும் ஆழப்படுத்தியது.

”கும்பகோணமாய் இருக்கும் கொங்கை என்றேங்கி
கும்பகோணத்தாளைக் கொண்ட சங்கரன் அம்பிக்கு
முதல் நாளில் முதல் நிர்வாணத்தில்
மங்கை கொங்கை தொங்கு சலாம் போட்டது.”

– தமிழ் நாடனின் ’காமரூபம்’ கவிதைகள்

இதை போன்றே அவரின் "படாத பாடு பட்ட பட்டோடி" - பதிவு நினைக்கும்  போதெல்லாம் சிரிப்பை  வரவழைத்துவிடும். (http://rprajanayahem.blogspot.in )

Thursday, December 12, 2013

கர்ணன் - பரசுராமர் ஒரு நெகிழ்ச்சி

நேற்று vijay TV யில் ஒளிபரப்பான மகாபாரத தொடரில் கர்ணன் பரசுராமர் தொடர்பான காட்சி எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

அவரவர் செய்யும் தொழில்கள் அவர்களது குலம் சார்ந்தே இருந்த காலகட்டத்தில் கல்வி முறையும் அதை ஒட்டியே இருந்தன. குலத்தின் அடிப்படையில் கற்க வேண்டிய கல்வியும், செய்ய வேண்டிய தொழிலும் வரையறுக்கப்பட்டதால், மற்ற தொழில்களை பற்றிய நடைமுறை அறிவு மற்றும் அதை சார்ந்த நுட்பங்களையும் ஒருவன் தெறித்து கொள்ள முடியாத நிலையே அப்போது காணபட்டது. இதுவே பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம் / சந்ததியினர் ஒரே தொழிலை செய்ய காரணமாக இருந்ததுடன் தொழில் சார்ந்து உயர்குலம், தாழ்குலம் என பாகுபாட்டையும் ஆரம்பித்து வைத்தது.

இந்த கால கட்டத்தில் தான் தேரோட்டி குலத்தில் வாழ்ந்த (பிறந்த அல்ல ) கர்ணன் உயர் குலத்தினர் கற்கும் போர் கல்வி முறையை கற்க விரும்பினான். தான் விரும்பும் கலையை கற்க தனக்கு உரிமை உண்டென்ன மிகவும் நம்பினான். ( குலக் கல்விக்கான எதிர்ப்பு அப்போதே பதிவு செய்யப்பட்டுவிட்டது. ) அப்போதிர்ந்த வழக்கப்படி அது கர்ணனுக்கு மறுக்கப்பட்டது. கலை பயிலும் ஆர்வத்தில், பிராமணர்க்கு மட்டும் போர்க்கலைகள்  கற்று தரும் பரசுராமரிடம் தான் பிராமணன் என்ற பொய்யுரைத்து கலைகளை கற்கிறான். பாடங்கள் முடிந்து ஒரு ஒய்வு தருணத்தில் குருவின் நித்திரைக்கு தன மடியை தலையனையாக்க, எதிர்பாராமல் வண்டு ஒன்று துடையை துளைக்க, குருதி பெருகும் நிலையிலும் குரு நித்திரைக்கு பங்கம் வாரா வண்ணம் பொறுத்திருக்க அதுவே அவனுக்கு வினையாகிறது. ஒரு பிராமணரால் இவ்வளவு வலியை பொறுக்க முடியாதே என்ற சந்தேகத்துடன் குரு வினவ கர்ணன் உண்மையை ஒப்புக் கொள்கிறான். கோபம் கொண்ட பரசுராமர், கர்ணன் கற்றுகொண்ட கலை, அது தேவைப்படும் இக்கட்டான சூழ்நிலையில் அவனக்கு கை கொடுக்காது என சாபமிடுகிறார்.

நாம் கல்வி கற்பதே அது தேவைப்படும் இடத்தில உபயோகபடுத்தவே. கற்ற உயர் கல்வியின் பயனை  ஒரு தாழ் குலத்தினன் அனுபவிக்க கூடாதா? குல கல்வி முறை தவறு என பதிவு செய்த ஆசிரியர் அதை மீறும் ஒருவனுக்கு இப்படிப்பட்ட தண்டனையை கொடுத்து குலக் கல்விக்கு ஒத்து ஊதுகிறாரே என்ற ஐயம் என்னுள் இருந்தது.

ஆனால் நேற்றைய தொடரில் தன் அருமை சீடருக்கு சாபம் ஏதும் விடவில்லை என்றும் கர்ணன் பொய்யுரைத்து கற்றானே என்ற வருத்தத்தில் உரைத்ததாக காட்சிபடுத்தி உள்ளது நெகிழச் செய்தது. அதிலும் பரசுராமர் வாய் வார்த்தையாக, "உண்மையை சொல்லி உன் ஆசையை நியாயப்படுத்தி அதற்காக முயற்சித்துக்கொண்டே ( கவனிக்கவும் முயற்சித்துக்கொண்டே) இருந்திந்தால் நானோ அல்லது வேறு ஒருவரோ உனக்கு நிச்சயம் போதித்திருப்பர். ஆனால் பொய்யுரைத்து, குருவை ஏமாற்றி நீ கற்றுக்கொண்ட கலையானது உலக சத்திய தர்மபடி தேவையான பொழுது உனக்கு கை கொடுக்காமல் உன்னை நிர்கதியாய் தவிக்க வைத்து விடுமே.... மகனே" என்று புலம்புவதாக அமைத்து இருந்தது பரசுராமர் பாத்திரத்தின் மேல் மேலும் மதிப்பு உயர வழி வகுத்தது.

குலக்கல்விக்கு எதிராக எண்ணத்தை வளர்த்துக் கொண்டு சத்தியத்துடன் போராடிக்கொண்டே இருந்தால் ஒரு நாள் உங்கள் எண்ணம் ஈடேறும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

"சிந்தித்து செயலாற்றுங்கள்"

Tuesday, December 10, 2013

குற்றால சாரல்

திண்டுக்கலில் நங்கள் வசித்த நாகல் நகர் பகுதியில் வருடம் முழுமைக்கும் சுற்றுலா ஒரு முதன்மையான பொழுது போக்காகும். ஆன்மிக சுற்றுலா, உல்லாச சுற்றுலா, இன்ப சுற்றுலா, சாரல் சுற்றுலா என்று எதாவது போஸ்டர் கண்ணில் தட்டுபட்டு கொண்டே இருக்கும். அதுவும் பொங்கலுக்கு அடுத்து நாங்கள் கொண்டாடும் அம்மன் பண்டிகையை ஒட்டி, நெசவு தொழிலுக்கு விடுமுறை. அப்போது அம்மனை நிராதரவாக விட்டுவிட்டு உல்லாச சுற்றுலா கிளம்பி விடுவோம். உல்லாச சுற்றுலா மற்றும் கறி விருந்து க்கு என்றே மாதாமதம் சீட்டு சேர்க்க நிறைய குழுக்கள் அன்று இருந்தன.

இதில் குற்றால சீசன் காலமான ஆணி, ஆடியில் போடப்படும் சாரல் சுற்றுலாவிற்கு மிகுந்த வரவேற்பு இருக்கும். அதை நினைக்கும் போதே சாரலடிக்கும் ஈர நினைவுகள். ஆரம்பத்தில் இந்த சுற்றுலா முறை பரவலாக இல்லை. அப்போது நாங்கள் மாமா, அத்தை, சித்தி, தாத்தா, பாட்டி என்று குடும்பமாக குற்றாலம் சென்று சமைப்பதற்கு வசதியுள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து கொள்வோம். ஒரு நாளைக்கு 5 or 6 முறை அருவி குளியல் இருக்கும். விளையாட்டு, ஒய்வு, குளியல், நிறைவான உணவு, அருமையான சாரல் என ஒரு கலவையான அனுபவம், 30 வருடத்திற்கு பின்னும் அதே ஈரத்துடன் நெஞ்சில் நிழலாடுகிறது.

சுற்றுலா முடிந்து திரும்பி வந்த நாட்களில், நண்பர்களுடன்  அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் இன்று  நினைவில் இல்லை என்றாலும் அந்த வயதிற்கான எங்களின் சிலாகிப்புகள், மகிழ்சிகள் நினைவில் அப்படியே தங்கி உள்ளன.

இரண்டொரு நாளில் மீண்டும் அடுத்த வருட குற்றால சாரல் சுற்றுலாவிற்குரிய திட்டமிடல் தொடங்கிவிடும்.

Monday, December 09, 2013

எஸ்.ரா. வின் புத்தக வெளியீட்டு விழா




களம் மற்றும் உயிர்மை இணைந்து நடத்திய, எழுத்தாளர் S ராமகிருஷ்ணனின் 10 நூல்கள் வெளியீட்டு விழா திருச்சியில் 08-12-2013 அன்று நடந்தது. இத்தகைய புத்தக வெளியீட்டு விழாக்கள் எப்போதும் சென்னை யில் மட்டுமே நடைபெறுவதால் அதில் கலந்து கொள்ள போடப்படும் திட்டம் எல்லாம் வேலைப்பளு மற்றும் குடும்ப சூழ்நிலையால் தடை பட்டு போவது வழக்கம். திருச்சியில் என்பதால் விழா நாளை மிக ஆவலோடு எதிர்பார்த்து கலந்து கொண்டது மிக திருப்தியாக இருந்தது. 

எழுத்தாளர் எஸ். ரா. எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய தங்கு தடையில்லாத எழுத்துகள், கதை படிக்கும் ஒருவரை அவர் அனுமதி இன்றியே கதைக்குள் இழுத்து செல்லும் பாங்கு அற்புதமான அனுபவமாகும். இந்த கலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா வல்லவர். அவருடைய கட்டுரைகள், சிறு கதைகள், நாவல்கள் மற்றும் இணைய கடிதங்கள் என்ற எல்லா format களிலும் அதனை நிருபித்திருபார். அதோடு தான் ஒரு பாத்திரமாகவும்,   படிக்கும் வாசகனை ஒரு பாத்திரமாகவும் மாற்றி இரண்டு பேருக்கும் நடுவில் இணக்கத்தை ஏற்படுத்தும் கலையில் வல்லவர். ஆனால் அவர் எடுத்து கொள்ளும் களங்கள், உத்தம புத்திரராகிய தமிழர்களால் ரசிக்கபட்டாலும் பொது வெளியில் பரந்து பட்ட பாராட்டை பெறவில்லை என்பதே உண்மை. அந்த வகையில்  மிக பரந்துபட்ட வாசகர்களால் ஏற்றுகொள்ளபட்டவரும் commercial hit அடித்த  எழுத்தாளர் சுஜாதாவிற்கு  அடுத்து commercial successful எழுத்தாளர் என்று எஸ்.ரா. வை சொல்லலாம்.

எஸ்.ரா. வின் 10 நூல்களை பற்றி கவிஞர் தேவதச்சன், எழுத்தாளர் எஸ்.பெருமாள், கவிஞர் நந்தலாலா மற்றும் எழுத்தாளர் முருகேச பாண்டியன் ஆகியோர் பேசினர். விழா விற்கு நான் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றதால், கவிஞர் மனுஷ்ய புத்திரனின் வாழ்த்துரையை தவற விட்டுவிட்டேன். எஸ்.ரா. வின் சிறுகதைகளை பற்றி பேசிய நந்தலாலா வின் சிலாகிப்புகள் நயம். டெய்சி அப்படித்தான் என்ற  எஸ்.ரா. வின் சிறுகதை பற்றி என் மனதில் இருந்த கருத்தை அவரும் வெளி மொழிந்தார்.

எஸ்.ரா. வின் ஏற்புரை மிகவும் நயமுடன், முதன் முறை அவர் பேச்சை கேட்கும் எனக்கு மிகுந்த மன நிறைவை தந்தது. நன்றி.

பின்குறிப்பு: ரூ 920 மதிப்புள்ள 10 புத்தகங்களையும் ரூ.700 என்று அறிவித்துவிட்டு, விழா முடியும் தருவாயில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் தனிப்பட்ட பங்களிப்பாக ரூ.200 குறைத்து கொண்டது அதிகம் பேர் வாங்க வழி வகுத்தது. ( கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாம் காலியாகி முன் பதிவு வரை சென்றது தமிழர்களின் தள்ளுபடி வியாபார மனோபான்மையை மற்றுஒரு முறை நிருபித்தது.)

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...