Sunday, August 20, 2006

Height of Creativity

என் ஆதியும் என்னில் பாதியும்

தாய்க்குப் பின் தாரம் என்றேன்.....

தாயின் முகத்தில் மகிழ்சி!!
தனக்கு பின் தானே அவள் என்று....

தாரத்தின் முகத்தில் பெருமிதம்!!
முன்னாளில் அவர் இந்நாளில் நான் தானே....

எந்நாளோ! விடிவு எந்நாளோ!!

Tuesday, August 08, 2006

சுட்டும் விழி சுடர்

அவள்...
கயல் விழியாளா?
மான் விழியாளா?

பார்வை பட்டு
மெழுகாய் உருகுகிறேனே?
அனலாய் தவிக்கிறேனே?

ஒரு வேளை
சூரிய விழியாளோ?

இனியதாய்... என் இனிய தாய்...

இனிய தாய்...
என் இனிய தாய்...

இனியதாய் என் கணங்கள் அனைத்திலும்
ஆசியுடன் கலந்திருக்கும் இனிய தாய்...

என்னுருவை வடித்து அதில்
தன்னுருவை நிலைத்து
அருவமாய் என் இனிய தாய்...

அன்று நினைவாகி...
நேற்று புகையாகி...
இன்று படமாகி விட்ட
என் இனிய தாய்...

அவளை விட எளியதாய்
-- ஓர்இறைவனை

எங்கு காண்பேன் இனி???

Friday, August 04, 2006

முதலிரவு



முழித்துப்
            பார்த்தேன்.....
முகத்தில்
            இரத்தம்!?...

அங்கேயுமா?

மழைக்கால மேகம்.....

மறைந்து ஓடும் நிலவு.....

யார் அந்த... கயவன்?

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...