Wednesday, July 07, 2010

அன்று பெய்த மழையில்

அன்று பெய்த மழையில்
                       அவள் நினைவுகள்…
இன்று உறைத்த வெயிலினில்
                       அவள் உணர்வுகள்…
கண் மூடலின் இருளில்
                       அவள் உளறல்கள்…
தழுவிச் செல்லும் தென்றலில்
                       அவள் உரசல்கள்…
என் காதோர நரையில்
                      காத்திருப்பின் சலிப்புகள்…
என்னை வாட்டும் ஆசையில்
                     அவள் நினைவுகள்…
அதுவே என் உயிராகிப் போன
                      என் உணர்வுகள்…

2 comments:

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...