Tuesday, August 08, 2006

இனியதாய்... என் இனிய தாய்...

இனிய தாய்...
என் இனிய தாய்...

இனியதாய் என் கணங்கள் அனைத்திலும்
ஆசியுடன் கலந்திருக்கும் இனிய தாய்...

என்னுருவை வடித்து அதில்
தன்னுருவை நிலைத்து
அருவமாய் என் இனிய தாய்...

அன்று நினைவாகி...
நேற்று புகையாகி...
இன்று படமாகி விட்ட
என் இனிய தாய்...

அவளை விட எளியதாய்
-- ஓர்இறைவனை

எங்கு காண்பேன் இனி???

No comments:

Post a Comment

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...