Thursday, December 19, 2013

மரணம் பேசியது

மூலக்கதை :  Death Speaks    
Author   : Jeffrey Archer 

தமிழில் :  அடியேன் ( என் முதல் முயற்சி )

பாக்தாத் நகரத்து வியாபாரியிடம், காலையில் மார்க்கெட் சென்ற வேலைக்காரன் பதட்டத்துடனும் பயந்த முகத்துடனும் ஓடி வந்து, "எஜமானரே  காலை மார்க்கெட் சென்றிருந்த பொழுது, ஒரு பெண்மணியின் மீது தவறி விழுந்தேன். திரும்பி பார்த்தால் அவள் மரண தேவதை. பயமுறுத்தும் பார்வையுடன்  மரணம் செய்விக்கும் நோக்குடன் நோக்கினாள். எனக்கு மிகவும் பயமாக உள்ளது. தயவு கூர்ந்து தங்களுடைய குதிரையை இரவல் கொடுத்தால், நான் இங்கிரிருந்து தப்பி சமரா நகரத்திற்கு சென்று விடுவேன். அங்கு மரணம் என்னை கண்டு பிடிக்க முடியாது" என்றான். எஜமானரும் ஒத்துக்கொள்ள, அவரின் குதிரையின் மீதேறி பிரம்பால் அதன் விலாவில் அடிக்க,  மிக வேகமாக அங்கிருந்து அகன்றான்.

பிறகு எஜமானன் மார்க்கெட் வந்து கூட்டத்தில் இருந்த என்னை அடையாளம் கண்டு கொண்டு என்னை நோக்கி, "ஏன் என் வேலைக்காரனை காலையில் பயமுறுத்தும் பார்வையில் பதட்டமிட வைத்தாய்?" என்று கேட்க நான் சொன்னேன் " அது பயமுறுத்தும் பார்வையில்லை. உண்மையில் அவனை பக்தாத்தில் பார்த்ததற்காக ஆச்சர்யபட்டுதான் நோக்கினேன். ஏனென்றால் அவனுடன் இன்று இரவு சமரா வில் சந்திப்பதாகத்தான் ஒப்பந்தம்."



Note:
இது என் முதல் முயற்சி பற்றி உங்கள் கருத்துகளை comment செய்யவும்.

இதன் ஆங்கில மூலத்தை படிக்க click செய்யவும்.

OR copy & paste this link into your browser
http://www.babumadav.blogspot.in/2013/12/death-speaks-short-story-by-jeffrey.html

3 comments:

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...